என் காதல்...!!

.

காதல் என்றும் புனிதமானது
என்பதை நான் அறிவேன்
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன்..!!

ஷஜகான் செய்த தப்பினால்
தாஜ்மகால் உருவானது
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகின்றது...!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்ததடி
ஆசைகள் பல இருந்தும்
அவையும் மடிந்ததடி...!!

சொல்லி வருவதில்லை 
காதல்...
சொல்ல முடிவதில்லை 
காதல்....
சொல்ல மொழியும் இல்லை
காதல்....
சொன்னாலும் உனக்கு 
புரியவில்லை
என் காதல்.....!!

by - தமிழ் நிலா