வா வா அன்பே .....

வா வா அன்பே
வா வா அருகிலே
உன் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
நான் உருகியே....

தினம் நட்சத்திரம்
எண்ணியே கழிந்தது
நாட்களே..
நெஞ்சில் உந்தன்
காதல் முட்டியே
வழிந்ததே....!!

உன் புகைப்படம் பார்த்து
பார்த்து தொலைந்தது என்
நொடிகளே...
நிலவினை பார்த்து
பார்த்து கழிந்தது என்
இரவுகள்....

உன் கண்ணில் என்ன
வைத்தாய்... அது மாயம்
செய்யுதே... உன்
நெஞ்சில் என்னை வைத்தாய்
காதலில் மூச்சு
முட்டுதே..... !!!!

நீ தரும் முத்தத்தால்
அந்த சத்தத்தால் என்
இதயம் துடிக்குதே...
தினம் வரும் கனவினால்
கண்கள் யுத்தத்தால். ...
என் உயிர் வாழுதே..

உன் அன்பால் தனிமையை
மறக்கிறேன்...
உன் நினைவால் தனிமையை
இழக்கிறேன்..
நீ வந்தால் தானே நான்
நானாவேன்.... வா வா அன்பே...

by- தமிழ் நிலா...