உன்னை நீ காதலி ....



கவிதை எழுத
ஆசையுடன் உட்கார்ந்தேன் 
வார்த்தைகள் வருவதாய் இல்லை,


கவிஞனுக்கு தான்
கவிதை வருமாம்.. இது
காதலி சொன்னது..

கவிஞன் ஆக
காதலிக்க வேண்டுமாம்- இது
நண்பி சொன்னது...

யாரை நான் காதலித்தால்
கவிதை எழுதலாம் என்றேன்..
உன்னை நீ காதலி என்றாள்
மனைவி...!!! 

by sanjay தமிழ்நிலா