யார் நீ...


உன் சிரிப்பால்
என்னை அதிர வைத்தாய்...
உன் பேச்சால்
என்னை உருக வைத்தாய்...
உன் பார்வையால் 
என்னை மயக்கி விட்டாய்...
உன் பாசத்தால்
என்னை உறைய விட்டாய்...

உன் நடையில் என்னை
தவிக்க விட்டாய்...
உன் இடையில் என்னை
துடிக்க வைத்தாய்...
உன் மார்பில் என்னை
மறைத்து வைத்தாய்...
உன் அழகில் என்னை
நனைய வைத்தாய்....


ஒருமுறை பார்ப்பதால் தோன்றும்
இதய தவிப்புகளை நீ அறிவதில்லை
உன்னை பார்க்க தூண்டும் ஆசையை
என்னால் மறைக்க முடியவில்லை...


நீ பிரமனின் மகளா...- என்னை
அழகால் மயக்குகிறாய்...
நீ இயமனின் மகளா..- என்னை
அழகால் கொல்கிறாயே...

தமிழ்நிலா