இசை தீ




அழகே எந்தன் உயிரே...
நிலவே உயிர் நிலவே...
உலகாளும் இசை தீயே..
எனையாளும் தமிழ் தாயே..

இரவினில் கூட உன்னைப்பார்க்கிறேன்...
இசையினை கொண்டு கவிபாடினேன்..
காலையில் நேற்றும் தடுமாறினேன்..
காதலை கொண்டு உனை மீட்கிறேன்..

கவிதையில் ஹைஹூ நான்தானடி...
ஸ்வரங்களில் எல்லாம் நீதானடி...
ஒருவரி முதல்வரி கவி நானடி
முழுவதும் அடக்கிடும் பொருள் நீயடி..
பல்லவி கொண்டு நடந்தேனடி
சரணங்கள் செய்து வந்தாயடி....
உன் அழகை பாட வார்த்தை ஏதிங்கடி..
உன் சினுங்கல்கள் எல்லாம் இசைதானடி...

ஆ....ஆ....ஆ ...  நீ வா வா வா.... ஒரு முத்தம் தா தா தா.....
உயிர் வரை போ போ போ....  நீ நீ..... என்னை கொல்லடி...

தமிழ்நிலா