இரவும் நிலவும்...


நிலவில் இரவா, இரவில் நிலவா
தெரியவில்லை
கருமை அழகா பொன் மேனி அழகா
புரியவில்லை

நிலவினை பெண் என
பார்த்திடும் போது
அவள் கூந்தலின் கருமை
இரவாய் போனதுவோ....

ஒரு நிலவால் என் வாழ்வில்
இரவா தெரியவில்லை
தமிழ் நிலவால் என் உயிருக்கு
ஒளியா புரியவில்லை....

அவள் கண்கள் இரண்டும்
நிலவாய் போனால் கண்
இமைகள் தான் இரவாகும்,
பொன் மகள் என்னை பாராவிட்டால்
என் வாழ்வு முழுதும் இரவாகும்..

தமிழ் நிலா