என்னிடமுமா...???



கண்களை மூடினேன் எதிரில் நீ...
கண்களை திறந்தேன் இதயத்தில் நீ...

உன்னை மறப்பதற்கு எனக்கு 
இயலவில்லை...
என்னை ஏற்பதற்கு உனக்கு
சம்மதம் இல்லை....!!

என்னை மறக்கவேண்டும் என்று நீ
எண்ணும் போதெல்லாம் 
என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்...!!
என் இதயத்துக்குள் புகுந்து... 
உணர்வுகளை கிளறுகிறாய்....
காதலின் தவிப்புகளை எனக்கு மட்டும் 
சொந்தமாக்கிவிட்டாய் ...

யார் காதலையும் நீ
ஏற்க மறுத்ததால் தான்
உன்னில் காதல் வந்தது...!!
அதற்காக என் காதலிலுமா???? 
by தமிழ் நிலா sanjay