கட்டாந்தரையான என் இதயத்தில்
காதல் என்ற செடியை வைத்து
உன் பார்வையால் நீர் ஊற்றி
உரமூட்டிவளர விட்டாய்.... !!
செடி வளர்ந்து மரம் வந்த போது..
மொட்டு வந்து தலை அசைத்த போது
நீ இல்லை....!! பூ பூக்கும் போது
மரத்தையே காணவில்லை....!!
நீ வைத்தது முள் செடி என்று
தெரியாமல் என் இதயம்...
முட்களால் கிழித்து கொண்டது...
ஒவ்வொரு நொடிகளும்...!!
ஏதோ ஒன்றை பெற்று விட்டேன்
என்று எண்ண தோன்றியது அப்போது
அது காதல் அல்ல காதல் வலியே
என்று உணர்ந்தேன் இப்போது...!!
By- தமிழ் நிலா sanjay