போய்விட்டாள் என்று...



அது ஒரு காலை நேரம்...
பேருந்தின் ஜன்னல் ஓரம்...
வேகமா போகும்
பேருந்தின் உள்ளே - நான்
தென்றலாய் மிதந்தேன் வெளியே...

கற்பனையில் உறைந்து என்னை..
நிசப்த்த அலைவரிசையில்
திடிரென..பாட்டு போல் 
பேருந்தில் ஒரு ஒலி..
கலைத்து போட்டது கற்பனையை....

உள்ளே நிமிர்ந்து பார்த்தேன் 
சிதைந்து போனது என் சிந்தனை....
இமைக்க மறந்த எனது கண்கள்
சொல்லியது...- நீ தேடிய 
தேவதை இவள் தான் என்று....

புன்னகையால்
என்னை சிதைத்தவளை
சிறை எடுக்க கண்களை மூடினேன்...
திறந்தபோது காணவில்லை 
எந்தன் காரிகையை...
தென்றலில் வந்த அவள்
தலைமுடி சொல்லியது,
போய்விட்டாள் என்று........