நதியலையில் ஆடும் நிலவு....!!


உன்னை பார்த்து காதல் கொள்ள
நெஞ்சம் ஏங்குதே...!!
நீ என்னை பார்த்து ஓடும் போது..
கண்கள் கூசுதே....!!

நதி அலையினில் ஆடிடும்
நிலவினை போலே அசைந்தே
போகிறாய்......!!
தினம் கனவினில் வந்து என்
நெஞ்சின் மேலே தவழ்ந்தே
போகிறாய்....!!

நிலவினை தொடரும்
அலையினை போல நானும்
வருகிறேன்....!!
உன் விரலினை பிடித்து
காதல் கொண்டிட இரவும்
நினைக்கிறேன்....!!

நான் நினைக்கிற பொழுதினில்
நினைவாய் வந்து மறைந்தே
போகிறாய்...!!
என் கண்களின் ஓரம்
கண்ணீராக நீயும் வழிந்தே
போகிறாய்.....!!!

by-தமிழ் நிலா