வெள்ளி மலரே.....



வெள்ளி மலரே எந்தன் உயிரே
வில்லாய் நீ மாறி காதல்
அம்பை வீசினாய்....உன்
அன்பாலே நான் வாழ்க்கையின்
அர்த்தம் உணர்ந்தேனே...

அன்பே என் நெஞ்சில் எல்லாம்
நீ  வந்த காலின் தடம்
நிலவே நீ வந்தால் போதும்
தடைகள் கூட படியாய் மாறுமடி.

என் கண்ணீர் துடைக்க
கைகள் கேட்டேன் மேல்.தாங்கி
தோழாய் நின்றாய் காதலியே..
என் விழியோரம் வழியும் கண்ணீர் 
உன் கண்ணோடும் வழிகிறதே
உறக்க மறுக்கும் கண்கள் கூட
தாயென உன் மடி தேடுகிறதே....

உயிரே உன் நெஞ்சுக்குள்ளே.
என் மூச்சு உள்ளதடி
பெண்னே உன் கண்ணுக்குள்ளே
என் உயிர் தான் வாழுதடி..
கண்ணே உன் கண்மணிக்குள்ளே
சுத்துதடி என் உலகம்
பெண்னே உன் பொன் விழி தானடி.
எந்தன் பூவுலகம்.....

என்..நெஞ்சோடு..காதலியாய்
நீ..மட்டும் போதுமடி –அன்பே
என் காதல் தானாய் வளருமடி...

தமிழ் நிலா

காற்றுவெளி June 2011