நண்பர்களுக்கு வணக்கம்...!!

எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், தமிழ் நிலா, சஞ்சய் எனும் பெயர்களில் எழுதுவதை, அவற்றின் பெயர்களை நீக்கி தங்களுடயதகவே இடுகிறார்கள்.. என்னால் பெயர் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில உத்தமர்கள் மட்டுமே என்னை கேட்டு அதுவும் அதே பெயருடன் பதிகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மேலும் நான் சில நண்பர்களை வினாவ அவர்கள் தொடர்பை துண்டிக்கிறார்கள்.. ஏன் என புரியவில்லை.. அவர்களை பெயர் இட்டு குறிப்பிட விரும்ப வில்லை. "காதல் சாரம்" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு விடயம் அநேகரின் முகப்புத்தக பகுதியில் காண்கிறேன். அவற்றில் அநேகமானவற்றில் பெயர் நீக்கப்பட்டுள்ளது..

இதை எங்கு கண்டாலும் தெரியப்படுத்தவும்...

முகபுத்தக நெருங்கிய நண்பர்கள் இனிமேல் கவிதைகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளர்கள். அத்துடன் இவாறு நடப்பதை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும்.. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கி விமர்சனங்கள் தந்து ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

நன்றி


காதல் சாரம்...

யாரை நீ காதலித்தாயோ 
அவள் வேறொருவனை காதலித்தாள்.
யாரை நீ காதலிக்கின்றாயோ
அவள் வேறொருவனை காதலிக்கின்றாள்.
யாரை நீ காதலிக்க போகிறாயோ
அவளும் வேறோருவனையே காதலித்திருப்பாள்.
உன்னுடையது எதை இழந்தாய்
ஏன் தாடி வளர்க்கிறாய்
யாரை நீ கொண்டு வந்தாய்
அவளை நீ காதலிக்க
யாருக்கு நீ காதலை சொன்னாய்
அவள் உன்னை காதலிக்க
யார் உன்னை காதலித்தாள் 
நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க
காதலை எங்கிருந்து பெற்றாய் 
அது இங்கேயே பெறப்பட்டது
யார் என்று உன் காதலியோ
அவள் நாளை
மற்றொருவனுடையதாகின்றாள் 
மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையதாகின்றாள்.

இதுவே காதலின் நியதியும்

சாரமும் ஆகும்.

தமிழ் நிலா

2005/07/16

0 comments:

Post a Comment

கருத்துக்களுக்கு