நீ என் காதலியாக வர வேண்டும்...........



உன்னை பார்த்து கவிதை எழுதினேன்
உன் சிரிப்பில் இசையை அறிந்தேன்
உன் நடையில் தாளம் கேட்டேன்....
உன் மூச்சில் ராகம் உணர்ந்தேன்...

உன் கண்ணில் சுரங்கள் பார்த்தேன்..
உன் இதயத்துடிப்பில் மெட்டமைத்தேன்
உன் உதட்டில் சுருதி போட்டேன்
உன் இடையில் இசை அமைத்தேன்...

உன்னால் நான் ஒரு கலைஞன் ஆனேன்.....
நான் இசைப்புயலாக வர ஆசை இல்லை
நீ என் காதலியாக வர வேண்டும் என்பதே
என் ஒரு ஆசை................???